Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குழந்தையின் பிறந்த நாளில் ... காக்கா பிடிக்காதீங்க!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஐயப்ப பக்தர்களே குரு சொல் கேளுங்க!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜன
2014
04:01

இப்போது, பக்தர்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு போய் வந்து கொண்டிருக்கிறார்கள்.  பல ஆண்டுகளுக்கு முன், காஞ்சிபுரத்தைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 20 பேர், மகா பெரியவரைச் சந்தித்தனர். தாங்கள் ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் முன், மகா பெரியவரிடம் ஆசி பெற வந்ததாகத் தெரிவித்தனர். பெரியவரும் அவர்களை ஆசிர்வதித்தார். நீங்கள் நேராக சபரிமலை போக வேண்டாம். மதுரை மீனாட்சியம்மன், திருச்செந்தூர் முருகன், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி, திருவனந்தபுரம் அனந்த பத்மநாபன், குருவாயூரப்பன் கோயில்களுக்கு போய்விட்டு, நமது ஆச்சாரியார், ஆதிசங்கரர் அவதரித்த காலடி சென்று, ஆச்சாரியாரையும், கிருஷ்ணரையும் வழிபடுங்கள். பிறகு, சபரிமலைக்குச் செல்லுங்கள், என்றார். அவர்களும் சரியென ஒப்புக் கொண்டு வந்துவிட்டனர். சபரிமலை யாத்திரைக்கு தயாரானபோது, அவர்களில் எட்டு பேர் மட்டும், பெரியவர் சொன்ன மாதிரி மற்ற தலங்களுக்கெல்லாம் போக வேண்டும் என்று கட்டாயமா என்ன! அதற்கு நாட்கள் அதிகமாகுமே! எங்களுக்கு வசதிப்படாது. சபரிமலைக்கு நேராகப் போகிறோம், என்று சொல்லி கிளம்பி விட்டனர். மற்ற 12 பேரும், பெரியவரின்  உத்தரவுபடி தங்கள் பயணத்திட்டத்தை வகுத்து கொண்டனர். யாத்திரை முடிவடைந்தது. பெரியவர் உத்தரவுப்படி நடந்தவர்கள், ஊர் வந்து சேர்ந்தனர். மற்ற எட்டு பேரும் சபரிமலைக்கு மட்டுமே போய்விட்டு திரும்பவில்லை. அவர்கள் எங்கிருக்கிறார்கள் என அவர்கள் வீட்டில் உள்ளவர்கள் தேட ஆரம்பித்தனர். இரண்டு, மூன்று நாட்கள் கழித்து தான், அவர்கள் சென்ற வாகனம் விபத்துக்கு உள்ளாகி, ஆஸ்பத்திரியில் இருப்பது தெரிய வந்தது. காயங்கள் குணமாகி, ஊர் திரும்பவே பத்து நாட்கள் ஆகி விட்டது.  வந்தவுடன், அவர்கள் பெரியவரைச் சந்தித்து மன்னிப்பு கேட்டனர். பெரியவர் அவர்களிடம், உங்களுக்கென ஒரு குரு இருப்பார். ஆனால், என்னை ஒரு குருவாக மதித்து, என்னிடம் ஆலோசனை கேட்டதால் தான், நான் உங்களை அவ்வாறு சென்று வரும்படி சொன்னேன். நீங்கள் நல்லபடியாக வந்து சேர்ந்ததே ஆனந்தம் தான், என்றார். பின்னால், நடப்பவற்றை முன்கூட்டியே அறிவிக்கும் தீர்க்கதரிசியாக விளங்கினார் மகா பெரியவர்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனீஸ்வரரின் மகனான இவருக்கு பலன் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் ... மேலும்
 
தோஷம் இல்லை. நாட்டு வைத்தியரிடம் கொடுத்தால் வைத்தியம் செய்ய ... மேலும்
 
11வது அல்லது 16 வது நாளில் பெயர் ... மேலும்
 
* ஜபம் – காலை, மதியம், மாலையில் 108 முறை சொல்வது* உபாசனை – வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ... மேலும்
 
அதிகாலை 4:30 – 6:00 மணி). மனம், உடம்பு புத்துணர்ச்சி பெறும் இந்த நேரத்தில் தியானம் மூலம் கடவுளோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar