கார்த்திகை மாத சுக்லபட்ச ஏகாதசியை ஒட்டி குருவாயூரப்பன் கோயிலில் நடத்தப்படும் உற்சவம் தனிச்சிறப்பு வாய்ந்தது. அந்நாளில் காசி, பத்ரி, சபரிகிரி ஆகிய திருத்தலங்களின் புண்ணிய தீர்த்தங்களின் மகிமையும், கங்கை, யமுனை உள்ளிட்ட நதிகளும் குருவாயூரில் ஒருங்கே கூடுவதாக ஐதீகம்.