பதிவு செய்த நாள்
11
ஜூலை
2014
12:07
பழநி : உலகநலன் வேண்டி, பழநி மலைக்கோயிலில் 108 சங்குபூஜையுடன் அன்னாபிஷேகம் நடந்தது. பழநி மலைக்கோயில் பாரவேல் மண்டபத்தில் 108 வலம்புரி சங்குகளில், தீர்த்தம் நிரப்பப்பட்டு 6 கலசங்கள் வைத்து சுப்ரமண்யர் யாகபூஜை நடந்தது. பகல் 12 மணிக்கு உச்சிக்காலத்தில் மூலவர் ஞான தண்டாயுதபாணிசுவாமிக்கு சங்காபிஷேகமும், அதைத்தொடர்ந்து மூலவர் சிரசில் மஞ்சள், வில்வம் கலந்த, சுத்தஅன்னம் கிரீடமாக சூட்டி, சுவாமி பாதங்களில் படைத்து, சிறப்பு அர்ச்சனை, மகாதீபாராதனை நடந்தது.நிகழ்ச்சி ஏற்பாடுகளை சித்தநாதன் அன் சன்ஸ் சிவனேசன், தனசேகரன், பழனிவேல், ராகவன் செய்திருந்தனர். இன்று திருஆவினன்குடி கோயிலிலும், நாளை பெரியநாயகியம்மன் கோயிலிலும், மாலை 5.30 மணிக்கு மேல் சாயரட்சை பூஜையில் அன்னாபிஷேகம் நடக்கிறது. ஜூலை 13 ல் பெரியாவுடையார் கோயிலில் அன்னாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை பழநிகோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.