மதுரை : மதுரை கான்பாளையம் தேவி கருமாரியம்மன் கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது.கோயில் பக்த சபை கமிட்டித் தலைவர் பெரியசேகரன் தலைமை வகித்தார். செயலாளர் சிவக்குமார் வரவேற்றார். துணை மேயர் திரவியம், மாநகராட்சி வரி விதிப்பு குழுத் தலைவர் ஜெயபாலன், கவுன்சிலர் சரவணன், முன்னாள் கவுன்சிலர் ராமமூர்த்தி, இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் பங்கேற்றனர். துணை செயலாளர் குமார் நன்றி கூறினார்.