Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முத்துக்குமாரசாமி கோவில் விழா நாளை ... சிக்கம்மன் சித்தர் பீடத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோகுலாஷ்டமி கொண்டாட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஆக
2014
12:08

ஈரோடு: பல்வேறு பள்ளிகள் சார்பில், ஈரோட்டில் நடந்த கோகுலாஷ்டமி விழா கொண்டாட்டத்தில், பள்ளி குழந்தைகளுக்கான போட்டி நடத்தப்பட்டது. "காலைக்கதிர் சார்பில் அறிவிக்கப்பட்ட போட்டியில் பங்கேற்க, பல்வேறு பள்ளிகள் ஆர்வத்துடன் குழந்தைகளை தயார்படுத்தினர். கிருஷ்ணர், மாயக்கண்ணன், ராதை, குழல் ஊதும் கண்ணன் என பல வேடங்களில் குழந்தைகள், கிருஷ்ணரை நேரில் காணும்படி உள்ளத்தை உருக்கினர்.

* ஈரோடு, சூரம்பட்டி இந்து கல்வி நிலையத்தில், நடந்த போட்டியில், அழகாக வேடமிட்டு, பாசுரம் பாடச் செய்தனர். அங்கு சென்ற நமது குழுவினர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பரிசுக்கான குழந்தையை தேர்வு செய்தனர். போட்டியில், நான்கு முதல் ஆறு வயதுடையோர், கண்ணன், ராதை வேடம் அணிந்தும், ஏழு முதல், பத்து வயதுடையோர், வேடத்துடன், ஒரு பாசுரமும் கூற வேண்டும். 11 முதல், 14 வயதுடையோர், கிருஷ்ணர் லீலைகளில் ஏதாவது ஒன்று, அல்லது பகவத் கீதையில் ஒரு ஸ்லோகம் கூற வேண்டும், என அறிவிக்கப்பட்டிருந்தது. குழந்தைகளின் பாசுர உச்சரிப்பு, அலங்காரம், தனித்துவம் போன்றவை மூலம், பரிசுக்கான குழந்தைகள் தேர்வானார்கள். இப்பள்ளியில், 68 குழந்தைகள் பங்கேற்றன. இதில், நான்கு முதல், ஆறு வயதுடையோர் பிரிவில், யாழினி, நிஷாந்த், முகம்மது அஜிஷ் ஆகியோரும், ஏழு முதல், பத்து வயது பிரிவில், அபிஷேக், மவுசினி, செந்தூர்வர்ஷனும் முதல் மூன்று பரிசை வென்றனர்.

* இடையன்காட்டுவலசு, இந்து கல்வி நிலையத்தில், 41 குழந்தைகள் பங்கேற்றனர். மிகச்சிறுவர்களில், தரணிக்கண்ணன், பூர்ணரக்ஷா, வேங்கடநாதனும், ஏழு முதல், பத்து வயது பிரிவில், கிஷோர்குமார், ஸ்ரீகீர்த்தி, அமிர்தவர்ஷினும் முதல் மூன்று பரிசை வென்றனர். மேலும், தர்ஷ், மவுனிஷ்குமார், தேஜஸ்வினி, ஜெய்ஸ்ரீதர், தருண் மற்றும் காருண்யா நேத்ரா ஆகியோர் ஆறுதல் பரிசு பெற்றனர்.

* மாமரத்துப்பாளையம், இந்து கல்வி நிலையத்தில், 120 குழந்தைகள் பங்கேற்றனர். மிகச்சிறுவர் பிரிவில், சாருநேத்ரா, யோகிதா, நிஷாந்த், இரண்டாவது பிரிவில், பிரியதர்ஷன், சிபிராஜ், ஷர்மிதா, மூன்றாவது பிரிவில், சஞ்சய் விக்ரம், தனலட்சுமி ஸ்ரீவள்ளி, ஹஷினிதா ஆகியோர் முதல் மூன்று பரிசை வென்றனர். மேலும், ரோகித், வசிராசிம்ரா, கீர்த்தனாம்பிகா, ஸ்ரீனேஷ், நிதிஷ், குருசரண், சுதர்ஷனம், மிதுன், ஹிருத்திக்ராஜா, விஷால், கிரிக்ஷித், பாலமுருகன், ருர்ஷிதா, அபிநந்தனா, மயூரி ஆகியோர் ஆறுதல் பரிசு பெற்றனர். தொடர்ந்து, மூன்று நாட்கள் நடக்கும் போட்டியில், இன்று, கருங்கல்பாளையம் தி டிவைன் நர்சரி அன்ட் பிரைமரி பள்ளி, வீரப்பன்சத்திரம் வினாயகா வித்யா பவன் நர்சரி அன்ட் பிரைமரி பள்ளி, வீரப்பன்சத்திரம் ஸ்ரீஜனனி மெட்ரிக்குலேஷன் பள்ளி, சூரம்பட்டி வலசு செங்குந்தர் வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி, வில்லரசம்பட்டி ஸ்ரீமாருதி வித்யாபவன் பள்ளி, திண்டல் வேளாளர் மகளிர் உயர்நிலைப்பள்ளி குழந்தைகள் பங்கேற்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar