Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

கரூர் வெண்ணைமலையில் படி பூஜை விழா சதனபுரீஸ்வரருக்கு 108 சங்காபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சஞ்சீவமலை கோவிலில் 1,008 தீபங்கள் ஏற்றி பக்தர்கள் வழிபாடு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 டிச
2014
12:12

ஓமலூர்:ஓமலூர் அருகே, சஞ்சீவமலை திருக்கோவிலில், கார்த்திகை பரணியை முன்னிட்டு, மகா பரணி தீபம் மற்றும், 1,008 தீபங்கள் ஏற்றும் தீப திருவிழா நேற்று நடந்தது.ஓமலூர் அருகே, அரங்கனூர் கிராமத்தில், சஞ்சீவமலை கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில். ஆண்டுதோறும், கார்த்திகை மாதம் பரணியில், பரணி தீபமும், 1,008 மகா தீபமும் ஏற்றி வழிபடுவது வழக்கம். இந்த ஆண்டும், கார்த்திகை பரணியை முன்னிட்டு, கற்பக விருட்சத்தின் முன்பு பரணி தீபம் நேற்று ஏற்றப்பட்டது.பின்னர், அதனை சுற்றிலும், 1,008 மகா தீபங்கள் ஏற்றப்பட்டது. இதில், சேலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியிலிருந்து வந்திருந்த, 700க்கும் மேற்பட்ட பக்தர்கள், தாங்கள் கொண்டு வந்த நெய் மற்றும் நல்லெண்ணெய்யில் தீபங்களை ஏற்றி வழிபாடு செய்தனர்.இதுகுறித்து, சஞ்சீவமலை திருத்தல சேவா சங்க நிர்வாகிகள் கூறியதாவது:பழங்கால தமிழர்கள், விருட்சத்தை வழிபட்டனர். மனிதர்களுக்கும், விருட்சங்களுக்கும், நட்சத்திரங்களுக்கும், நவக்கிரகங்களுக்கும் உள்ள தொடர்பினை அடைப்படையாகக் கொண்டு, இந்த திருத்தலம் அமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பண்டைய தமிழர்களின் வழிபாட்டினை மீட்டெடுக்கும் வகையில், இக்கோவிலை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அமைத்தோம். இதுபோன்ற கோவில், வேறெங்கும் அமைக்கவில்லை.இந்த திருத்தலத்தின் பிரதான விருட்சமான கற்பக விருட்சம் உள்ளது. இந்த விருட்சத்திடம் வேண்டினால், நினைத்தது நடக்கும். அடுத்தது சனிவிருட்சம், இந்த விருட்சத்திடம், தன்னிடமிருந்து எது நீங்க வேண்டும் என வேண்டுகிறோமோ அது நீங்கும். அதுபோல், 12 ராசிக்கான விருட்சங்கள் வைக்கப்பட்டு வளர்க்கப்படுகிறது. இந்த விருட்சங்களை, அதற்கே உரிய முறையோடு வணங்கி வந்தால், கேட்கின்ற அனைத்து வரம்களும் கிடைக்கும்.கோவிலுக்கு பூசாரிகள் கிடையாது. அதேபோல், பக்தர்கள் தட்சணை கொடுக்க வேண்டியதில்லை, நுழைவுச் சீட்டு இல்லை, உண்டியல் இல்லை. அனைத்தும், தமிழர்களின் தொன்மையை மீட்டெடுக்கும் விதமாக, சஞ்சீவமலை திருத்தல சேவா சங்கம் நடத்தி வருகிறது.இவ்வாறு தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar