பதிவு செய்த நாள்
27
ஏப்
2015
12:04
ஆர்.கே.பேட்டை: சிறுவர்கள் நடத்திய அக்னி வசந்த உற்சவத்தில், நேற்று காலை, துரியோதனனை, ‘சோட்டா பீம்’ வீழ்த்தினார். மாலையில், தீமிதி திருவிழா நடந்தது. ஆர்.கே.பேட்டையில், ஏழு ஆண்டுகளாக சிறுவர்கள் நடத்தும் அக்னி வசந்த உற்சவம் நடந்து வருகிறது. இதற்கான கொடியே ற்றம், கடந்த, 16ம் தேதி நடந்தது. அன்று இரவு, பகாசூரன் கும்பம் படைக்கப்பட்டது. தொடர்ந்து, தினசரி மகாபாரத கூத்து, பாரத பிரசங்கம், மஞ்சு விரட்டு, அர்ச்சுனன் தபசு உள்ளிட்டவை நடத்தப்பட்டன. நேற்று காலை, பீமன், துரியோதனன், திரவுபதி, காந்தாரி வேடம் அணிந்த சிறுவர்கள், துரியோதனனை வீழ்த்தும் 18ம் நாள் போர்க்கள நிகழ்ச்சியை நடத்தினர். இதை காண, திரளான கிராமவாசிகள் வந்துஇருந்தனர். கடந்த, 10 நாட்களாக காப்பு கட்டி விரதம் மேற்கொண்டிருந்த பக்தர்கள் (சிறுவர்கள்), நேற்று மாலை கோவில் வளாகம் முன்பாக எழுப்பி அக்னி குண்டத்தில் இறங்கி, த ங்களின் நேர்த்தி கடனை நிறைவேற்றினர். சிறுவர்கள் நடத்திய திருவிழா என்றாலும், அனைத்து நிகழ்வுகளும் மிகவும் தத்ரூபமாக நிகழ்த்தப்பட்டது, பகுதிவாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.