செய்த பாவ, புண்ணியத்தைப் பொறுத்து வாழ்வு அமைகிறது. முற்பிறவியில் செய்த நன்மையால் மகிழ்ச்சியை அனுபவிப்பவர்களை, கொடுத்து வைத்தவர்கள் என்று சொல்வார்கள். மனிதன் நல்லவனாக வாழ்ந்தால், கொடுத்து வைத்தவனாகி விடுவான் என்பதை இது காட்டுகிறது. நல்லதை விதைத்தால் நல்லதை அறுவடை செய்யலாம்.