நெல்லிக்குப்பம்: வாழப்பட்டு திரவுபதி அம்மன் கோவிலில் மழை வேண்டி விளக்கு பூஜை நடந்தது. நெல்லிக்குப்பம் வாழப்பட்டு திரவுபதி அம்மன் கோவிலில் விளக்கு பூஜையை முன்னிட்டு விநாயகர், திரவுபதி அம்மன், பாலமுருகன், துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது. உலக அமைதிக்காகவும் மழை வேண்டியும் பெண்கள் விளக்கு பூஜை செய்தனர். பூசாரி மனோகர் பூஜைகளை செய்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.