கடலூர்: வண்டிப்பாளையம் வரவூர் மாரியம்மன் கோவிலில் உள்ள விஸ்வரூப சூலத்தம்மனுக்கு நேற்று 108 குடம் பாலாபிஷேகம் நடந்தது. கடலூர், புதுவண்டிப்பாளையத்தில் உள்ள வரவூர் மாரியம்மன் கோவிலில் 100ம் ஆண்டு சித்ராபவுர்ணமி விழா கடந்த 30ம் தேதி கணபதி பூஜையுடன் துவ ங்கியது. மறுநாள் 1ம் தேதி செடல் திருவிழா நடந்தது. வேண்டுதல் கொண்ட பக்தர்கள் செடல் போட்டும், தேர் செடல் அணிந்தும் ஊர்வலமாக வந்து நேர்த்தி கடன் செலுத்தினர். 2ம் தேதி மாலை கங்கை அம்மன் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. நேற்று முன்தினம் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு மதியம் ஊரணி பொங்கலும், மாலை பத்ரகாளிக்கு மூலமந்திர யாக பூஜை, சித்ரா பவுர்ணமி காளி பூஜை மற்றும் ஸ்ரீர மகாமேருவிற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இறுதி நாளான நேற்று காலை பக்தர்கள் 108 பால் குடங்களை சுமந்து ஊர்வலமாக கோவிலை அடைந்தனர். அதனைத் தொடர்ந்து விஸ்வரூப சூலத்தம்மனுக்கு 108 குட பாலாபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. மாலை பூச்சொரிதல் உற்சவம் நடந்தது. வரும் 10ம் தேதி மாலை உதிரவாய் துடைத்தல் உற்சவம் நடக்கிறது.