பூமிக்கு முதன் முதலாக சொர்க்கத்தில் இருந்து இறைவனால் ஆதம் (அலை) அவர்கள் அனுப்பப் பட்டார்கள். இவர் ஒரு வெள்ளிக்கிழமையன்று படைக்கப்பட்டார். சூரியன் உதிக்கும் நாட்களில் மிகச்சிறந்த நாள் வெள்ளி. அந்தநாளில், முதல் மனிதர் பூமிக்கு அனுப்பப்பட்டது போல, உலகத்தின் கியாமநாளும் (இறுதிநாள்) வெள்ளிக்கிழமையாகவே அமையும் என்கிறார் நபிகள் நாயகம். கியாமநாள் எப்போது வரும் என்பதற்கான அறிகுறிகளையும் அவர் சொல்லியுள்ளார்.ஊ தகுதியற்றவர்களிடம் நல்ல காரியங்கள் ஒப்படைக்கப் பட்டால், கியாமநாளை எதிர்பாருங்கள்.ஊ ஒரு வேலைக்காரப் பெண், தனது எஜமானன் மூலம் குழந்தை பெற்றால் கியாமநாளை எதிர் பாருங்கள். (ஒழுக்கம் சிதைந்து போகும் காலம்).ஊ ஆடுகளை மேய்க்கும் ஏழைகள், மிகப்பெரியவீடுகளைக் கட்டும் காலம் கியாம நாளின் அறிகுறி.(முறைகேடான சம்பாத்தியம் மூலம் கிடைக்கும் பணத்தில் வீடு கட்டுதல்) ஊ கல்வி அறிவு இல்லாத காலம், அறியாமை தலை விரித்தாடும் காலம், மதுபானம் அருந்தப்படும் காலம், விபச்சாரம்பரவலாக நடக்கும் காலம்ஆகியவையும் கியாமநாளின் அறிகுறிகளே. ஊ மாடி மீது மாடி கட்டுவது இறுதிநாளுக்கு அறிகுறி.ஊ உண்மையாளர்களை பொய்யர்கள் என்றும், பொய்யர்களை உண்மையாளர்களென்றும் கணிக்கும் காலமும் கியாமநாளுக்கு அறிகுறியே. ஊ கடைத்தெருவில் வியாபாரம் மந்தமாக இருக்கும் காலமும், விபச்சார குழந்தைகள் பெருகும் காலமும், ஒருவரைப் பற்றி ஒருவர் புறம் பேசும் காலமும் கியாமநாளின் அறிகுறிகள் தான்.இந்த அறிகுறிகளைக் கொண்டு, இந்த பூமி இறுதிகாலத்தை நெருங்கி விட்டதா என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டியது தான்.