விருத்தாசலம் கோவில்களில் கிருத்திகை சிறப்பு வழிபாடு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜூன் 2015 12:06
விருத்தாசலம்: கிருத்திகையையொட்டி, விருத்தாசலம் கோவில்களில் முருகருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
விருத்தாசலம், மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் சுவாமி கோவிலில் நேற்று காலை விநாயகர், கொளஞ்சியப்பர் சுவாமிகளுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர், தேன் உள்ளிட்ட பொருட் களால் சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது.
பகல் 12:00 மணிக்கு சந்தனக்காப்பு அலங்காரத்தில் சுவாமிகள் அருள்பாலித்தனர். மாலை 6:00 மணிக்கு வெள்ளித் தேரில் உற்சவ மூர்த்தி உட்பிரகார வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. விருத்தகிரீஸ்வரர் கோவிலில் வள்ளி தெய்வாணைசமேத சண்முக சுப்ரமணியர், 28 ஆகம சன்னதியில் குமரேச சுவாமி, வேடப்பர் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.