மகுடஞ்சாவடி: மகுடஞ்சாவடியில், கடந்த, 6ம் தேதி பூச்சாட்டுதல் மற்றும் கம்பம் நடுதலுடன் மாரியம்மன் திருவிழா துவங்கியது. நேற்று அதிகாலை, திருக்கல்யாணம் நடந்து முடிந்தபின், தீ மிதி விழா துவங்கியது. அதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து, தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.