பைபிளில், “அன்பே நல்ல ஔஷதம்’ (மருந்து) என்றும், ‘இனிய சொற்கள் எலும்புகளுக்கு ஔஷதம்,” என்றும் அருமையான வசனங்கள் உள்ளன. இது நுõற்றுக்கு நுõறு உண்மை என்று தற்போது வெளியான ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது. பெங்களூருவில் டாக்டர் தீபக்ஷா என்பவர் ‘ஹீலிங் டச்’ (தொட்டால் குணமாகும்) என்ற பெயரில் ஒரு மருத்துவமனையை நடத்துகிறார். அவர், தனது 20 ஆண்டு கால அனுபவத்தை விவரித்தார். ஆணானாலும், பெண்ணானாலும் வயது வரம்பின்றி எல்லோருக்கும் அன்பே தேவைப்படுகிறது. எல்லாரும் தன்னை நேசிக்க வேண்டும் என்ற ஆசை, இயல்பாகவே எல்லாரிடமும் இருக்கிறது. அன்பு இல்லாமல் போகும்போதோ அல்லது குறைவுபடும்போதோ உள்ளுணர்வுகளில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த தாக்கம் மனதைப் புண்படுத்துகிறது. இந்நிலை நீடிக்கும்போது உடலில் ஏதேனும் வியாதியைக் கொண்டு வருகிறது. மனச்சோர்வு, ரத்த அழுத்தம், இருதய நோய், மூச்சுத்திணறல் ஆகியவற்றுக்கு அன்பின்மையே காரணம். இப்படிப்பட்ட பாதிப்புகள் கருவில் வளரும் சிசுவையும் பாதிக்கிறது. கர்ப்ப காலத்தில் பெற்றோராலும், மாமனார் மாமியாராலும், கணவனாலும் புறக்கணிக்கப்பட்ட நிலையிலுள்ள பெண்கள் இவ்வித பாதிப்பை அதிகமாகவே அடைகின்றனர். இப்போது புரிந்ததா? பைபிளைப் படிக்க வேண்டியதன் அவசியம்! அடிப்படைக் கல்வியான ஆன்மிகம் இல்லாமல், விஞ்ஞானத்தில் எவ்வளவு தான் முன்னேறினாலும் பயனில்லை.