விழுப்புரம்: விழுப்புரம் வீரவாழி மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளி பெருவிழா நேற்று துவங்கியது. விழாவையொட்டி, நேற்று காலை 7:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து இன்று பகல் 12:00 மணிக்கு சாகை வார்த்தல் நடக்கிறது. பின், 23 மற்றும் 24ம் தேதிகளில் இரவு இசை நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் வேலவன், செயல்அலுவலர் முத்துலட்சுமி செய்து வருகின்றனர்.