சாதத்துடன் பக்தி இணையும்போது அது பிரசாதமாகிறது! பட்டினியுடன் பக்தி சேரும்போது அது விரதமாகிறது! தண்ணீருடன் பக்தி சேரும்போது அது தீர்த்தமாகிறது! பயணத்துடன் பக்தி சேரும்போது அது யாத்திரையாகிறது! இசையுடன் பக்தி சேரும்போது அது கீர்த்தனையாகிறது! பக்தியில் வீடு திளைக்கும்போது அது கோயிலாகிறது! செயல்களுடன் பக்தி சேரும்போது அது சேவையாகிறது! வேலையுடன் பக்தி சேரும்போது அது கர்மவினையாகிறது! பிரம்மசரியத்தோடு பக்தி சேரும்போது அது துறவறம் ஆகிறது! இல்லறத்தோடு பக்தி சேரும்போது அது ஆன்மிகம் ஆகிறது! ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும்போதுதான் அவன் மனிதனாகிறான்! மனிதனுள் பக்தி முழுமையடையும் போது அவன் ஞானியாகிவிடுகிறான்!