காஞ்சியில் 14 திவ்விய திருக்கோயில்கள் அமைந்திருந்தாலும் எட்டு கைகளுடன் காட்சி தரும் அஷ்ட புயகரம் பெருமாள் திருக்கோயிலில் மட்டுமே சொர்க்கவாசல் தரிசனம் உண்டு. மோட்சம் தரும் ஏழு பெருமாள் கோயில்களில் காஞ்சிபுரம் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக, பெருமாள் கோயில்களில் ராஜகோபுர நுழைவாயில் ஒரு திசையிலும், சொர்க்கவாசல் வேறொரு திசையிலும் இருக்கும். ஆனால் இங்கு மட்டும் இரண்டு வாசல்களும் வடக்கு நோக்கி இருப்பது சிறப்பு.