திருவண்ணாமலைக்கு போக முடியவில்லையே! அவ்வளவு துõரம் போய் வர பணமில்லையே! நேரம் கிடைக்கவில்லையே! சந்தர்ப்ப சூழல் சரியாக அமையவில்லையே என வருத்தப்படுகிறீர்களா! அதற்கு அவசியமே இல்லை, அண்ணாமலையை வலம் வரவேண்டும் என்று நினைத்தாலே போதும். மானசீகமாக அந்த மலையை உலா வந்தாலே போதும். நமது பாவங்கள் பறந்து போய்விடும். கல்வி, நல்ல மனைவி அமைதல், சிறந்த குழந்தைகள் பிறத்தல், காரியங்கள் நல்லபடியாக முடிதல், ஆகிய பலன்களும் கிடைக்கும்.