Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விஸ்வேஸ்வரசுவாமி கோவிலில் சோமாசி ... பழநி வைகாசி விசாக விழா கொடியேற்றத்துடன் கோலாகல துவக்கம் பழநி வைகாசி விசாக விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
துார்வாரப்படாத சிவகங்கை குளம்: துர்நாற்றம் வீசுவதால் நோய் அபாயம்
எழுத்தின் அளவு:
துார்வாரப்படாத சிவகங்கை குளம்: துர்நாற்றம் வீசுவதால் நோய் அபாயம்

பதிவு செய்த நாள்

01 ஜூன்
2017
12:06

சிதம்பரம்: நடராஜர் கோவில் சிவகங்கை குளம் பல ஆண்டுகளாக துார் வாரப்படாமல் இருப்பதால் தண்ணீர் பாழாகி துர்நாற்றம் வீசுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. சிதம்பரத்தில் உள்ள 10 தீர்த்த குளங்களில் முதலாவது தீர்த்தம் சிவகங்கை குளம். இந்த தீர்த்த குளம் காசி தீர்த்தத்திற்கு நிகரானது என கூறப்படுவதால், இந்த குளத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது சிறப்பாக கருதப்படுகிறது.

சிவகங்கை குளம் பிரசித்திப் பெற்ற நடராஜர் கோவில் வடக்கு கோபுரம் அருகே உள்ளது. சிதம்பரத்தில் உள்ள தசதீர்த்த குளங்களுக்கு தண்ணீர் செல்ல ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டு இருந்தது. தற்போது அந்த நீர்வழிப்பாதை தனி நபர் ஆக்கிரமிப்பாலும், நீண்ட காலம் துார் வாரப்படாமல் இருப்பதாலும், துார்ந்து குளங்களுக்கு புதிய தண்ணீர் வருவது தடைபட்டுள்ளது. விளங்கியம்மன் கோவில் குளம் நிறைந்து, சிவகங்கை குளத்திற்கு தண்ணீர் வரும். சிவகங்கை குளம் நிறைந்து சிவப்பிரியை எனப்படும் தில்லையம்மன் கோவில் குளத்திற்கு தண்ணீர் வரும். இந்த தண்ணீர் பாதை துார்ந்ததால், 10 ஆண்டுகளுக்கும் மேல் புதிய தண்ணீர் குளங்களில் நிரம்புவது இல்லை.

இந்த ஆண்டு பருவ மழை பொய்த்துப் போனதால் சிதம்பரம் பகுதியில் உள்ள அனைத்து குளங்களும் தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கிறது.  சிவகங்கை குளத்தில் பல ஆண்டுகளாக சேதமடைந்த தண்ணீரும், மழை இல்லாத காரணத்தால் குறைந்த அளவில் இருக்கும் தண்ணீர் கெட்டியாக மாறி பச்சை நிறத்தில் காணப்படுகிறது. தண்ணீர் சேதமடைந்ததால் கடந்த மாதங்களில் குளத்தில் இருந்த மீன்கள் அனைத்தும் இறந்ததால், துர்நாற்றம் வீசியது. தற்போது, மேலும் தண்ணீர் குறைந்து கோவில் வடக்கு பிரகாரம் பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. நகரில் தொற்று நோய் பரவும் அபாயத்தால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்:  திருவிசநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில் கார்த்திகை அமாவாசை தினமான இன்று(19ம் தேதி) ... மேலும்
 
temple news
கோவை; கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மதுரை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தின் தற்போதைய நிலை குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம் புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவிலில், அலர்மேலு மங்கை தாயார் சமேத பிரசன்ன ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: கார்த்திகை மாத தேய்பிறை சிவராத்திரியையொட்டி, காஞ்சிபுரம் குபேரபட்டிணத்தில் அமைந்துள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar