ஆதிசங்கரர் லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமியைத் துதித்து போற்றி எழுதிய இந்த சுலோகத்திற்கு ஏற்ப சிற்பி சிலையில் தன் அபார திறமையினைக் காட்டின விக்ரஹம் இந்த அரும்பொருட்காட்சியகத்தில் உள்ளது.
உனக்குள்ள நான்கு திருக்கரங்களில் ஒன்றில் திருவாழியினையும், மற்றொரு திருக்கரத்தில் திருச்சங்கினையும், இன்னுமொரு திருக்கரத்தில் பாற்கடலில், திருஅவதரித்த லக்குமியை ஆலிங்கனம் பண்ணிக் கொண்டும், வேறு ஒரு, திருக்கரத்தில் பக்தர்களுக்கு அபயத்தை அளிக்கின்றாய். அந்தத் திருக்கரத்தில் பத்மம் அலங்கரிக்கிறது. ஓ லக்ஷ்மி நரசிம்மா! உன் தாமரை திருக்கரத்தால் எனக்கு அருள்! ஆதிசங்கரர் எழுதிய இந்த சுலோகம் கல் சிலை வடிவில் எஸ்.வி. மியூஜியத்தில் இரண்டாவது க்யாலரியில் பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கிறது.