பதிவு செய்த நாள்
17
ஆக
2017
01:08
பழநி, ஆடி கார்த்திகையை முன்னிட்டு, பழநி மலைக் கோயிலில் பக்தர்கள் மலர்காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். ஆடி கார்த்திகையை முன்னிட்டு, பழநி திருஆவினன்குடி கோயிலில் மதியம் 12:00 மணிக்கு குழந்தை வேலாயுதசுவாமி, சனி பகவான், தட்சணா மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. வெள்ளிக்கவசம் சாத்தி தீபாராதனையும், மலைக்கோயிலில் ஞானதண்டாயுதபாணிக்கு அபிஷேக, சிறப்புபூஜைகள் நடந்தன. ஆன்மிக பக்தி சொற்பொழிவு, இன்னிசை நிகழ்ச்சிகள் நடந்தது. மாலை 6:30 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை, பெண்களுக்கு தாலிக்கயிறு, மஞ்சள், குங்குமம் பிரசாதமாக வழங்கபட்டது. தமிழகம் மட்டுமின்றி கர்நாடக, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநில பக்தர்கள் மலர்க் காவடிகள், பால் குடங்கள் எடுத்து நேர்த்திக்கடன் செய்தனர்.