பதிவு செய்த நாள்
30
செப்
2017
03:09
ஆர்.கே.பேட்டை‘ஸ்ரீ தேவி, பூதேவி உடனுறை தரணிவராக பெருமாள் கோவிலில், ஆண்டு பிரம்மோற்சவம் இன்று துவங்குகிறது. அக்., 2ல், கருட வாகன சேவை நடக்கிறது. பொதட்டூர்பேட்டை அடுத்த மேல்பொதட்டூர் கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை தரணிவராக பெருமாள் கோவில். பழமையான இந்த கோவிலின் ஆண்டு பிரம்மோற்சவம், இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. மாலை 5:00 மணிக்கு சிறப்பு உற்சவம் மற்றும் சுவாமி வீதியுலா நடக்கிறது. நாளை மாலை, 4:00 மணிக்கு பரத நாட்டியம் நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து, சேஷ வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடக்கிறது. 2ம் தேதி மாலை, சிறப்பு வாய்ந்த கருட சேவை நடக்கிறது. வரும், 3ம் தேதி அனுமந்த வாகனத்தில் வீதியுலா எழுந்தருளும் சுவாமிக்கு, புதன் கிழமை காலை, 10:30 மணிக்கு, திருக்கல்யாண வைபவம் செய்விக்கப்படுகிறது. அன்று மாலை, 4:00 மணிக்கு ஊஞ்சல் சேவையை தொடர்ந்து, யானை வாகனத்தில் உற்சவர் புறப்பாடு ஆகிறார். 5ம் தேதி காலை, 11:30 மணிக்கு சக்கர ஸ்தானத்துடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.