பதிவு செய்த நாள்
23
அக்
2017
11:10
மாமல்லபுரம் : ஸ்தலசயன பெருமாள் கோவில் தேர், வீதியுலா உற்சவத்திற்காக, வண்ணம் தீட்டப்படுகிறது. இக்கோவிலில், சித்திரை பிரம்மோற்சவ விழாவில், ஸ்தலசயன பெருமாள்; பூதத்தாழ்வார் அவதார உற்சவ விழாவில், பூதத்தாழ்வார் என, திருத்தேரில் வீதியுலா செல்வர்.தேர் உற்சவத்திற்காக, சென்னை தொழிலதிபர், சில ஆண்டுகளுக்கு முன், நன்கொடையாக வழங்கிய மரத்தேர் பயன்படுத்தப்படுகிறது.இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை, உற்சவத்தின் போது, தேருக்கு வண்ணம் தீட்டி பராமரிக்கப்படும்.தற்போது, பூதத்தாழ்வார், 28ம் தேதி, தேரில் வீதியுலா செல்லும் நிலையில், தேர் வண்ணம் தீட்டி பராமரிக்கப்படுகிறது.