பதிவு செய்த நாள்
17
ஜன
2018
02:01
பாகூர் : சோரியாங்குப்பம் தென் பெண்ணையாற்றில் நாளை (18ம் தேதி) ஆற்றுத் திருவிழா (நதி தீர்த்தவாரி) நடக்கிறது. பாகூர் அடுத்துள்ள சோரியாங்குப்பம் தென் பெண்ணையாற்றில், பொங்கல் பண்டிகையின் 5வது நாளன்று ஆற்றுத் திருவிழா என கூறப்படும், நதி தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டிற்கான ஆற்றுத் திருவிழா நாளை 18ம் தேதி நடக்கிறது. இதில், பாகூர், சேலிய மேடு, அரங்கனுார், நிர்ணயப்பட்டு, குருவிநத்தம், இருளஞ்சந்தை, குடியிருப்புபாளையம், கரைமேடு, உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுவாமிகள் எழுந்தருளுவர். விழாவில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். தெற்கு போலீஸ் எஸ்.பி., அப்துல் ரகீம் தலைமை யில் 3 இன்ஸ்பெக்டர்கள், 10 சப் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 150க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.