நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தும் பஞ்சபூதங்கள். பிரபஞ்சம் என்பதற்கு ‘கடவுளுக்கு சம்பந்தமான ஐந்து’ என பொருள். ‘பிரபஞ்சம் என்பது பஞ்சபூதங்களின் சேர்க்கை என்றும், கடவுளே பஞ்சபூதங்கள்’ என்றும் உபநிஷதம் கூறுகிறது. இயற்கையும் இறைவனும் ஒன்றே என்ற அடிப்படையில் இந்த ஐந்திற்கும் சிவலிங்கம் வடித்து பஞ்சபூத தலங்களை உருவாக்கினர். அவையே காஞ்சிபுரம், திருவாரூர் (மண்), திருவானைக்காவல் (நீர்), திருவண்ணாமலை( அக்னி), காளஹஸ்தி (வாயு), சிதம்பரம் (ஆகாயம்)ஆகியவை.