Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விக்ரஹம் பிரதிபலிக்கும் நான்கு ... எதிர்கால சந்ததியினரை பற்றி சிந்திப்போம்.. இந்திய தேசத்தை வலுப்படுத்துவோம்; அயோத்தியில் பிரதமர் உரை எதிர்கால சந்ததியினரை பற்றி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அடாத மழையிலும் விடாது நெல்லையப்பருக்கு நடக்கும் பூஜை; வெள்ள நீரில் நீந்தி சென்று தீர்த்தம் எடுத்த அர்ச்சகர்கள்
எழுத்தின் அளவு:
அடாத மழையிலும் விடாது நெல்லையப்பருக்கு நடக்கும் பூஜை; வெள்ள நீரில் நீந்தி சென்று தீர்த்தம் எடுத்த அர்ச்சகர்கள்

பதிவு செய்த நாள்

25 நவ
2025
12:11

திருநெல்வேலி; திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டிருந்தாலும், அதை பொருட்படுத்தாது திருநெல்வேலி நெல்லையப்பர் சுவாமிக்கு நித்திய திருமஞ்சனத்திற்காக தீர்த்தம் எடுத்துச் சென்ற கோவில் அர்ச்சகர்கள்.


தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவிலில், நித்திய திருமஞ்சனத்திற்காக தாமிரபரணி ஆற்றில் இருந்து தினமும் கோவில் அர்ச்சகர்கள் தீர்த்தம் எடுத்து செல்வது வழக்கம். திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ச்சியான கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது ஆற்றில் சுமார் 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் பாய்ந்து கொண்டிருக்கிறது. இருந்தபோதிலும், நித்திய பூஜைகள் தடைபடக்கூடாது என்பதற்காக, கோவில் அர்ச்சகர்கள் மழை, வெள்ளம் என எதனையும் பொருட்படுத்தாது தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி, சுவாமி நெல்லையப்பருக்கு செப்பு குடத்தில் தீர்த்தம் எடுத்து சென்றனர்.


1992, 2023 போன்ற வெள்ளக் காலங்களிலும், கொரோனா பேரிடர் தொற்று காலத்திலும் கூட, சுவாமி நெல்லையப்பருக்கு தீர்த்தம் எடுத்துச் செல்லும் பணி தடைபடாமல் தொடர்ந்து நடைபெற்றது. கோவில் யானை காந்திமதி இருந்த காலங்களில், யானையின் மீது தீர்த்தம் எடுத்துச் சென்று சுவாமி நிலைபெருக பூஜை நடைபெற்றது. தற்போது யானை இல்லாத நிலையிலும் கூட, சுவாமியின் நித்திய பூஜைகள் தடைபடக்கூடாது என்பதற்காக எந்த சூழலையும் பொருட்படுத்தாது தீர்த்தம் எடுத்து கைங்கரியத்தை செய்து வருவதாக அர்ச்சகர்கள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி ராமர் கோவில் கட்டுமானம் நிறைவடைந்ததை குறிக்கம் வகையில் இன்று வளர்பிறை பஞ்சமி அபிஜித் ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்: குளிர்காலத்திற்காக ஸ்ரீ பத்ரிநாத் கோவில் நுழைவாயில்கள் இன்று பிற்பகல் 2:56 மணிக்கு ... மேலும்
 
temple news
அயோத்தி; உத்தரபிரதேச மாநிலம், அயோத்தி ராமர் கோவிலில் காவிக்கொடியை ஏற்றி வைத்த பிறகு பிரதமர் மோடி ... மேலும்
 
temple news
நத்தம், நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் கார்த்திகை மாத 2வது சோமவாரத்தை முன்னிட்டு சங்காபிஷேக ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவிலில், கார்த்திகை மாத சோமவாரத்தை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar