பதிவு செய்த நாள்
20
ஏப்
2018
12:04
சேலம், சேலம், சுகவனேஸ்வரர் கோயில் யானை ராஜேஸ்வரி, 42, உடல்நலம் பாதிக்கப்பட்டு, அவதிப்பட்டு வருகிறது.இது தொடர்பான வழக்கில், யானையை கருணைக் கொலை செய்வதற்காக, அதன் உடல்நிலை குறித்த அறிக்கையை அனுப்ப, உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது.
சேலம், கால்நடை பராமரிப்பு இணை இயக்குனர் லோகநாதன் தலைமையில், மருத்துவக் குழுவினர், 12 மணி நேரம் ஆலோசித்து, நேற்று முன்தினம் அறிக்கை தயாரித்தனர். அது, நேற்று காலை, உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டது.கால்நடை அதிகாரிகள் கூறியதாவது:யானைக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்ட நாளிலிருந்த உடல் எடை, தற்போதைய உடல் எடை சேகரிக்கப்பட்டது. தற்போது, அதன் உடல் நலனில் சிறு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. உயிர் பிழைக்க வாய்ப்புள்ளதால், தொடர் சிகிச்சை அளிக்கிறோம். அதனால், தற்போதைக்கு கருணைக் கொலை செய்ய வேண்டாமென அறிக்கையில் தெரிவித்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.