பூஜையின் துவக்கம், பூஜையின் முடிவு, நித்யோற்சவ காலம், விநோதங்கள் காட்டப்படும் காலம் ஆகிய நான்கு காலங்களிலும் கோயிலில் பெரியமணியை அடிக்கவேண்டும். அபிஷேகத்தின் துவக்கம். அபிஷேகத்தின் முடிவு, அர்ச்சனையின் முடிவு, நைவேத்தியத்தின் துவக்க நேரம், உற்சவத்தின் துவக்க நேரம், உற்சவத்தின் முடிவு நேரம், நாட்டிய உபசரிப்பின் முடிவு நேரம் போன்ற முக்கியமான கோயில் நடைதிறந்து மூடுதல் முதலானவற்றில் மட்டுமே பெரியமணி ஓசையை எழுப்பவேண்டும் என்பது ஆகம விதிமுறையாகும்.