தங்களுக்கு ஒரு கஷ்டம் வந்து விட்டால், எல்லாரும் கேட்கும் கேள்வி இதுதான்.“ஏன் இந்தக் கடவுள் இந்த உலகத்தை படைக்க வேண்டும்? நம்மையெல்லாம் ஏன் வாட்டியெடுக்க வேண்டும்?”. இது நன்றிகெட்டத்தனமான குற்றச்சாட்டு. தேவன் மனிதர்களை படைக்கும்போது, தம்மை அவர்கள் மகிமைப்படுத்துகிறார்களா என்பதை அறிவதற்காக நமக்கு சுதந்திரம் கொடுத்தார். எங்கு வேண்டுமானாலும் செல்லலாம், தான் வகுத்த விதிகளுக்கு உட்பட்டு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றார். அதே நேரம், தன்னால் படைக்கப்பட்டவன் தன்னை மதிக்கிறானா என்பதை அறிய, ஒரு மரத்தின் கனியை மட்டும் சாப்பிட வேண்டாம் என விலக்கினார். ஆனால் மனிதன் அதைச் சாப்பிட்டான். அதனால் சிரமப்பட்டான். கடவுள் குடிக்கச் சொன்னாரா? சீட்டாடச்சொன்னாரா? புகை பிடிக்கச் சொன்னாரா?இத்தகைய வழக்கங்களை உருவாக்கிக் கொண்டவன் மனிதன் தான்! பின் அவரை குற்றம் சொல்வது எவ்வகையில் நியாயம்?இப்படியெல்லாம் நாம் நன்றி கெட்டு, பாவிகளான பிறகும், தேவன் மனித வடிவில் நம்மிடையே தோன்றி பரிசுத்தப்படுத்தினார். அதன் பிறகும், நாம் பாவத்தின் பாதையில் சென்றால் அதற்கு யார் பொறுப்பு?