Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஜெய்பவானியம்மன் கோவிலில் சப்த ... புனித இன்னாசியார் ஆலய தேர்பவனி
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழங்கால கோவில்களின் நிலங்கள் மாயம்!அறநிலையத்துறை மீட்க எதிர்பார்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஆக
2018
02:08

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே பழமையான கோவில்களுக்கு சொந்தமான, 136 ஏக்கர் நிலங்களை மீட்க வேண்டும் என, அறநிலையத்துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டது. பொள்ளாச்சி அருகே சிஞ்சுவாடியில், ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்துக்கு முன் பாளையக்காரர்கள் ஆட்சி நடந்துள்ளது. அதில், ஜம்பநாயக்கர் எனும் பாளையக்காரர் ஆட்சிக்காலத்தில் வரதராஜப்பெருமாள் கோவில் கட்டப்பட்டுள்ளது.இந்து அறநிலையத்துறையின், ஒரு கால பூஜை திட்டத்தில், சேர்க்கப்பட்டுள்ள இக்கோவில் போதிய பராமரிப்பின்றி, மூலவர் சிலைகள், சன்னதியில் இல்லாமல் உட்பிரகாரத்தில் வைக்கப்பட்டுள்ளன. கோவிலை கோவை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் விமலா, பொள்ளாச்சி ஆய்வாளர் மல்லிகா ஆய்வு செய்தனர். அப்போது, பாளையக்காரர் வாரிசுகள் மற்றும் மக்கள், பாளையக்காரர் ஜம்பநாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட, வரதராஜப்பெருமாள், மாரியம்மன், சிறு துாண்டியம்மன், மாலப்பட்டி பெருமாள் மற்றும் விநாயகர் கோவில்களுக்கும் நிலங்கள் வழங்கப்பட்டன.

சிஞ்சுவாடி, கோலார்பட்டியில் மட்டும் ஆக்கிரமிப்பாளர் வசம் உள்ள, 136 ஏக்கர் நிலங்களை மீட்டு, கோவில் பெயருக்கு பட்டா மாறுதல் செய்து, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். நிலங்களை குத்தகைக்கு, பொது ஏலத்தில் விட்டு கிடைக்கும் வருவாயில், கோவிலை புனரமைத்து கும்பாபிேஷகம் நடத்த வேண்டும், என வலியுறுத்தினர். அதிகாரிகள், வரதராஜப் பெருமாள் கோவில் திருப்பணி செய்வதற்காக, ஒரு லட்சம் ரூபாய் நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆவணங்கள் சரிபார்த்து, ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar