பதிவு செய்த நாள்
05
செப்
2018
11:09
மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான 50 கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டு ஏக்கர் 4 சென்ட் நிலத்தை போலி ஆவணம் தயாரித்து விற்க முயன்ற செல்லத்தம்மன் கோயில் பூஜாரிகள் ஆறு பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.இந்த நிலம் எல்லீஸ்நகரில் உள்ளது. இதை கோயில் ஒப்புதலுடன் வீட்டு வசதி வாரியம் ஆர்ஜிதம் செய்தது. பின் கோயில் நிர்வாகம் கேட்டு கொண்டதால் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது.
இதற்கிடையே மீனாட்சி அம்மன் கோயிலின் உப கோயிலான செல்லத்தம்மன் கோயில் பூஜாரிகள் ஆர்.வி.லோகேந்திரன், வி.ஆறுமுகம், ஆர்.காசிவிஸ்வநாதன், வி.கிருஷ்ணமூர்த்தி, எல்.யுவராஜ், எல்.விஸ்வநாதன் ஆகியோர் தங்களின் மூதாதையர் விஸ்வநாதபிள்ளை பெயருக்கு இந்த நிலத்திற்கு போலி பட்டா தயாரித்தனர். பின், பவர்ஆப் அட்டார்னி ஏற்பாடு செய்து உதயகுமார், சண்முகம், செல்வராஜ், சச்சிதானந்தம் ஆகியோருக்கு விற்க ஏற்பாடு செய்தனர். நிலத்தில் ஈஸ்வரன், மலைச்சாமி, ராஜா ஆகியோர் மூலம் தகர கொட்டகை அமைத்து ஆக்கிரமித்தனர். கோயில் இணை கமிஷனர் நடராஜன், போலீசார் உதவியுடன் கொட்டகையை அகற்றினார். நிலம் மீட்கப்பட்டது. பூஜாரிகள் ஆறு பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.