பரமக்குடி:பரமக்குடியில் உள்ள பெருமாள் கோயில்களில் புரட்டாசிசனி வார விழா கொண்டாடப்பட்டது. புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் இருந்து பெருமாளைதரிசனம் செய்வது வழக்கம். பரமக்குடி சுந்தரராஜப்பெருமாள் கோயிலில் நேற்று முதல் சனி வாரத்தையொட்டிஉற்சவர் கோவர்த் தனகிரி மலையை சுமந்த படி, அருகில் இந்திரன் தரிசனம் செய்யும் வகையில் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மேலும் மூலவர் பரமஸ்வாமி, திருப்பதி சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். எமனேஸ்வரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் மூலவர் திருப்பதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பரமக்குடி அனுமார்கோதண்டராமசாமி கோயிலில் காலை முதல் இரவு வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பஞ்சமுக ஆஞ்சநேயர்கோயிலில் மூலவருக்கு திருப்பதி அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண் பிக்கப்பட்டது. இதே போல் சுற்று வட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் திருப்பதி சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக வீடுகளில் அரிசியை யாசகமாக பெற்று பக்தர்கள், பொதுமக்களுக்கு விருந்து படைத்தனர்.