திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் சமேத பத்மாஸனித்தாயார் கோயில்108 வைணவ திவ்யதேசங்களில் 44வதாக திகழ்கிறது. நேற்று புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டுஅதிகாலை 5 மணி முதல் இரவு வரைபக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். உற்ஸவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாணஜெகநாதப்பெருமாளுக்குவிஷேச திருமஞ்சனம், சாற்றுமுறை கோஷ்டி பாராயணம்உள்ளிட்டவைகள் நடந்தது. பட்டாச்சாரியார்கள் நாலாயிர திவ்யபிரபந்தப் பாடல்களை பாடினர்.ஏற்பாடுகளை சமஸ்தான திவான் பழனிவேல்பாண்டியன், செயல் அலுவலர் ராமு, பேஷ்கார் கண்ணன் உள்ளிட்டோர் செய்திருந்தனர். *சேதுக்கரையில் சேதுபந்தன ஜெயவீர ஆஞ்சநேயர் கோயிலில்பக்தர்கள் அனுமன் சாலீசா, பாராயணம், பஜனைகள் செய்து வழிபாடு செய்தனர்.பூஜைகளை ரெகுநாத பட்டர் செய்திருந்தார். * உத்தரகோசமங்கை அருகே அகரம் கதைக்குளம் ஸ்ரீதேவி, பூதேவி சமேதவெங்கடாசலப்பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத சிறப்பு பூஜைகள்நடந்தது.