கேரளாவில் பிரசித்திபெற்ற விளங்கும் கொடுங்கலூர் பகவதி அம்மன் கோயிலில், காவல் தெய்வமாக அருள்கிறாள் சண்டிகேஸ்வரி. சிவன்கோயிலில் சண்டிகேஸ்வரர் எப்போதும் சிவ தியானத்தில் இருப்பதுபோல், இங்கே சண்டிகேஸ்வரியும் பகவதியை தியானித்தபடியே இருக்கிறாள் என்பது ஐதீகம். இவளுக்குத் தினந்தோறும் தவிட்டால் அபிஷேகம் செய்யப்படுவது விசேஷம். காசநோயால் பாதிக்கப்பட்ட அன்பர்கள், இந்த சண்டிகேஸ்வரிக்குத் தவிடு அபிஷேகம் செய்து வழிபட்டால், விரைவில் நோய் குணமாகும என்பது நம்பிக்கை.