‘‘பிரார்த்தனையைத் தவிர வேறு எந்தச் செயலாலும் விதியை மாற்றிக் கொள்ள முடியாது. நற்செயல்களைத் தவிர எந்தச் செயலாலும் ஆயுளை நீடிக்கச் செய்யவே முடியாது,” என்கிறார்கள் அண்ணலார்.எவ்வளவு நுட்பமான உண்மையான வார்த்தைகள்! நம் ஆயுள் நோய் நொடியால் மட்டுமல்ல! குடித்து குடித்தே தன் அழிவைத் தானே தேடிக் கொள்பவர்கள் எத்தனை பேர்! ஒழுக்கமில்லாத, பிற நடவடிக்கைகளால் மாய்ந்து போகிறவர்களும் பெருகிக் கொண்டிருக்கிறார்கள்.எனவே, நன்மையான செயல்களைச் செய்வதற்காக இறைவனிடம் கண்ணீர் விட்டு துஆ செய்ய வேண்டும். அல்லாஹ் மிகவும் கிருபையாளனாக இருக்கின்றான். பிரார்த்தனை செய்யும் அடியார்களின் (வேண்டுதலை) கைகளை வெறுங்கையாக விடுவதற்கு வெட்கப்படுகிறான். அடியார்களின் மீது அல்லாஹ் மிகவும் கருணை உள்ளவன். அது மட்டுமல்ல! துஆ பிரார்த்தனை இறங்கிவிட்ட துன்பத்திற்கும், இறங்கவிருக்கும் துன்பத்திற்கும் பயன்தரக் கூடியதாகும்.எனவே பிரார்த்தனை செய்து விதியை மாற்றுங்கள்.நல்லதைச் செய்து நீண்டகாலம் வாழுங்கள்.