செஞ்சிக்கு வருகை தந்த ஆதியோகி ரதத்திற்கு பக்தர்கள் வரவேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14பிப் 2019 03:02
செஞ்சி: செஞ்சிக்கு வருகை தந்த ஈஷா யோகா மையத்தின் ஆதி யோகி ரதத்திற்கு பொது மக்கள் வரவேற்பளித்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.
கோவை அடுத்த வெள்ளியங்கிரி ஈஷா யோகா மையத்தில் உள்ள 112 அடி உயர ஆதியோகி சிலை முன்பு மகா சிவராத்திரி தினமான மார்ச் 4ம் தேதி இரவு முழுவதும் சிறப்பு வழிபாடு, யோகா நடைபெற உள்ளது.இதை வெளிப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் ஆதியோகி சிலை உள்ள ரதம் வலம் வருகிறது. நேற்று காலை 10:00 மணிக்கு செஞ்சிக்கு வருகை தந்த ரதத்திற்கு, திருவண்ணாமலை சாலையில் பக்தர்கள், பொது மக்கள் திரண்டு வரவேற்பளித்தனர்.
தொடர்ந்து, சிறப்பு தீபாராதனயும், வழிபாடும் நடந்தது. பின்னர் பீரங்கிமேடு, விழுப்புரம் சாலை, காந்தி பஜார் வழியாக கிருஷ்ணாபுரம் மாரியம்மன் கோவிலை அடைந்தனர். அங்கு பொது மக்கள் வழிபாடு நடத்தினர். ஊர்வலத்திற்கான ஏற்பாடுகளை ஈஷா யோக மைய தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.