பதிவு செய்த நாள்
19
ஏப்
2019
02:04
திருக்கச்சூர்: திருக்கச்சூரில் நடந்த தேரோட்டத்தில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
செங்கல்பட்டு அடுத்த, திருக்கச்சூர் அஞ்சானாட்சி சமேத தியாகராஜ கோவிலில், 10ம் தேதி, கொடியேற்றத்துடன், பிரம்மோற்சவ விழா துவங்கி, நடைபெற்று வருகிறது.இதன் முக்கிய விழாவான தேரோட்டம், நேற்று முன்தினம் (ஏப்., 17ல்), காலை, 8:45 மணிக்கு நடந்தது. ஏராளமான பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். மதியம், 12:30 மணிக்கு, தேர், நிலையை வந்தடைந்தது.அதே போல், அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோவில் தேரோட்ட மும், நேற்று (ஏப்., 18ல்)நடந்தது.