சின்னாளபட்டி மேலக்கோட்டை ஆஞ்சநேயர் கோயிலில், அஷ்டமி சிறப்பு பூஜை நடந்தது. திரவிய அபிஷேகத்துடன், சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அஷ்டோத்திர பூஜையுடன், மகா தீபாராதனை நடந்தது.
* கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், காரமடை ராமலிங்க சுவாமி கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில், அஷ்டமி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.