Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! பேட்டராய ஸ்வாமி கோவில் மஹா தேரோட்ட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி பங்குனி விழாவில்50 ஆயிரம் பக்தர்கள் குவிந்தனர்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஏப்
2012
11:04

திருத்தணி : முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவான நேற்று, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மூலவரை தரிசித்தனர். திருத்தணி முருகன் கோவிலில், பங்குனி உத்திர திருவிழாவையொட்டி காலை, 11 மணிக்கு மலைக் கோவிலில் உள்ள காவடி மண்டபத்தில் உற்சவருக்கு பால், பன்னீர் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் அணிவித்து பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மூலவர், சண்முகர், ஆபத்சகாய விநாயகர், வள்ளி மற்றும் தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசித்தனர். நேற்று முன்தினம், இரவு சென்னை நாட்டுகோட்டை செட்டியார்கள், 5,000 க்கும் மேற்பட்டோர் பாதயாத்திரையாக மலைக் கோவிலுக்கு வந்து முருகனை வழிபட்டனர். மேலும், தங்கத்தேரும் இழுத்தனர். விழாவை முன்னிட்டு உபகோவிலான சுந்தர விநாயகர் கோவிலில், காலை 9 மணிக்கு, சிவகாமி, சுந்தரேசனுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மூலவர் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. யாகசாலை அமைத்து நான்கு கால பூஜைகள் நடந்தது. மாலை 5 மணிக்கு சிவகாமி சுந்தரேஷ்வரர், அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் எழுந்தருளி, நகரின் முக்கிய வீதிகளில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழா ஏற்பாடுகளை, கோவில் இணை ஆணையர் தனபால் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் இன்று காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது.பழநி முருகன் கோயிலில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில், முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: பம்பா கணபதி கோவிலில் இருமுடி கட்டிக்கொண்டு, சபரிமலை சன்னிதானம் நோக்கி புறப்பட்ட ... மேலும்
 
temple news
குஜராத், குஜராத்தில் உள்ள டகோர் கோவிலில் அன்னகூட திருவிழாவில் பல நூற்றாண்டுகள் பழமையான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar