Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

வீட்டில் எலுமிச்சை தீபம் ஏற்றலாமா? காஞ்சிப்பெரியவர் உபதேசங்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
லட்சிய பயணம் தொடரட்டும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 அக்
2019
05:10

காஞ்சி மடத்திற்கு வந்த பக்தர் ஒருவருக்கு மனதில் சந்தேகம். லட்சிய வாழ்க்கை வாழ வேண்டும் என பெரியவர்கள் அறிவுரை சொல்கிறார்களே... “ஹரிச்சந்திர மகாராஜா பொய் பேசாமல் வாழ்ந்தார் என கதை சொல்கிறோம். ஆனால் பொய் பேசாமல் மனிதன்  வாழ முடியுமா? அப்படியிருக்க லட்சிய வாழ்க்கை பற்றிச் சொல்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது“ என்பதே அவரது சந்தேகம். சாத்தியமில்லாத ஒன்றை பற்றி ஏன் சொல்ல வேண்டும் என்ற சந்தேகத்தை மகாசுவாமிகளிடம் கேட்டார்.  சிரித்தபடி சுவாமிகளும் விளக்கம் அளித்தார்.  “உன் கேள்வி சரி தான். பொய் பேசக் கூடாது எனச் சொல்வது நடைமுறைக்கு உதவாத பேச்சு என நினைக்கிறாய். அதற்காக உத்தமமான யோசனைகளை எடுத்துச் சொல்லி சீடர்களுக்கு நினைவுபடுத்த  குரு ஸ்தானத்தில் இருப்பவர் (குருநாதர்) தவறக் கூடாது இல்லையா? அதனால் தான் உயர்ந்த லட்சியங்களை உலகிற்கு எடுத்துச் சொல்ல வேண்டியிருக்கிறது. சமுதாயத்திற்கும் இதனால் நன்மை ஏற்படும். ‘ஆதர்ச நிலை“  என்பதே தெரியாமல் போய் விடக் கூடாது அல்லவா?

கையில் சொடக்கு போட்டால் நினைத்தது நடக்க வேண்டும் என்ற மனநிலை  இப்போது வந்து விட்டது.  தினம் ஒரு ஜவுளி மில் முளைக்கிறது. நாசூக்கான, நாகரிகமான ஆடைகளுக்கு அனைவரும் மாறிக் கொண்டுள்ளனர். ஆனால் காந்திஜி என்ன செய்தார்? அவரவரே ராட்டையில் நூல் நூற்று ஆடை உடுத்த வேண்டும் என உபதேசம் செய்யவில்லையா?  நடைமுறை சாத்தியம் இல்லை என கைவிட்டால், பின்னர் அதைப் பற்றிய பேச்சு இல்லாமல் போகும். எவரெஸ்ட் சிகரத்தை எட்டிப் பிடிக்க வேண்டும் என்ற ஆசையோடு, காலம் காலமாக எத்தனையோ பேர் பயணம் மேற்கொண்டு, தோற்றுத் திரும்பினர். ஆனாலும் சாத்தியமில்லை என தொடர்ந்து முயற்சிக்க, கடைசியில் ஒருவர் சாதித்து விட்டார் அல்லவா? எனவே வருங்கால சந்ததிக்கு லட்சிய வாழ்வை நினைவுபடுத்துவதில் தவறக் கூடாது. லட்சியத்தை சிலர் அடையலாம் அல்லது அடைய நீண்டகாலம் பிடிக்கலாம்.  ஆனால் லட்சியத்தை நோக்கிய பயணம் தொடர வேண்டும். லட்சியம் இன்னதென்று தெரிந்து அதை நோக்கி நடந்தாலே நன்மை தான்“ என்றார்.  மனத்தெளிவு பெற்ற அவர் சுவாமிகளை வணங்கி விடைபெற்றார். - திருப்பூர் கிருஷ்ணன்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
பெங்களூரு குமாரசாமி லே -அவுட்டில் உள்ளது ஸ்ரீ 108 கணேசா கோவில். பெயருக்கு ஏற்றாற் போல, 108 கணேச ... மேலும்
 
temple news
பெங்களூரு கோரமங்களாவில் உள்ளது ஸ்ரீ பிரசன்ன கணபதி கோவில். இவரை ‛டெக்கி கணேசா’ எனவும் அழைக்கின்றனர். ... மேலும்
 
temple news
பெங்களூரு கஸ்தூரிபா சாலையில் உள்ளது ஸ்ரீ பிரசன்ன கணபதி கோவில், ‛டிராபிக் கணேசா’ கோவில் என கூறினால் ... மேலும்
 
temple news
பெங்களூரு ஜெய நகரில் உள்ளது ஸ்ரீ சக்தி கணேசா கோவில். பழமையான கோவில்களின் ஒன்றாகும். வேலைவாய்ப்புகள் ... மேலும்
 
temple news
பெங்களூரு கே.ஆர்., புரத்தில் உள்ளது ஸ்ரீ கட்டே கணேசா கோவில். மாலை நேரங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar