அரகண்டநல்லுார் அதுல்ய நாதேஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக பெருவிழா



திருக்கோவிலுார்; அரகண்டநல்லுார் அதுல்ய நாதேஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடியேற்ற விழாவையொட்டி நேற்று முன்தினம் காலை 6:00 மணிக்கு மூல மூர்த்திகளுக்கு அபிஷேகம், அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையும், 8:30 மணிக்கு கொடியேற்றமும் நடந்தது. தொடர்ந்து, சோமஸ்கந்தருக்கு தீபாராதனை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 6ம் தேதி மாலை திருக்கல்யாணமும், 8ம் தேதி காலை 10:30 மணிக்கு தேரோட்டமும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்