ஆடி வெள்ளி : அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு



போடி: ஆடி வெள்ளியை முன்னிட்டு போடி அருகே விசுவாசபுரம் பத்திரகாளி யம்மன் கோயிலில் கனிகள் அலங் காரத்தில் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் தரிசனம் பெற்றனர்.


* போடி அருகே மலை மீது உள்ள வடமலை நாச்சியம்மன் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் வடமலை நாச்சியம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் தரிசனம் பெற்றனர். 


போடி கொண்டரங்கி மல்லையசாமி கோயிலில் உள்ள துர்க்கை அம்மன், போடி குலாலர்பாளையம் காளியம்மன் கோயில், தாய் ஸ்தலம் ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோயில், போடி அருகே திருமலாபுரம் முத்து மாரியம் மன் கோயில், பத்திரகாளிபுரம் பத்திர காளியம்மன் கோயில், தேவாரம் பராசக்தி மாரியம்மன் கோயிலில் உள்ள அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு அலங்காரத்தில் இருந்த அம்மனின் தரிசனம் பெற்றனர். கூழ் காய்ச்சி பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்