ஆண்டாள் நாச்சியார் கோவிலில் பூரம் நட்சத்திர சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜூன் 2020 09:06
உடுமலை: உடுமலை, குறிஞ்சேரி ஆண்டாள் நாச்சியார் கோவிலில் பூரம் நட்சத்திர சிறப்பு பூஜை நடந்தது.உடுமலை, அருகே குறிஞ்சேரியில் ஆண்டாள் நாச்சியார் கோவில் உள்ளது. பூரம் நட்சத்திரத்தில் ஆண்டாள் அவதரித்ததால், அந்த நாளன்று, சுவாமிக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.வைகாசி மாத பூரம் நட்சத்திர நாளையொட்டி ஆண்டாள் நாச்சியாருக்கு, பால், பன்னீர், மஞ்சள் உட்பட, பல்வேறு திரவியங்களில் சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, சுவாமிக்கு பட்டுடுத்தி, சிறப்பு மலர் அலங்காரத்துடன், தீபாராதனை நடந்தது.