பதிவு செய்த நாள்
29
செப்
2020
09:09
லக்னோ : உ.பி.,யில் கொரோனா பரவலால் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் நடத்தப்படாது என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று (செப்.,28) தெரிவித்தார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறது. உத்தரப் பிரதேசத்தில் கொரோனா தொற்றை குறைக்க அம்மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதிகரிக்கும் நோய் பாதிப்புகளுக்கு மத்தியில் உ.பி.,யின் பல இடங்களில், துர்கா பூஜை கொண்டாட்டங்கள் நடத்தப்படாது என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று (செப்.,28) தெரிவித்தார்.
இது தொடர்பாக முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், உ.பி.,யில் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ வசதிகளையும் பிற தேவைகளையும் அரசு சிறப்பாக செயல்படுத்துகிறது. நோய் பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், மாநிலம் முழுவதும் சாலைகளில், எந்த கொண்டாட்டங்களும் நடைபெற அனுமதிக்கப்படாது. மக்கள் தங்களது வீடுகளில் துர்கா தேவியின் சிலையை வைத்து பாதுகாப்பாக பூஜை செய்ய வேண்டும். கொரோனா வழிகாட்டுதலின் கீழ், உ.பி.,யில் ராம்லீலா அரங்கேற்றப்படும். நோய் தொற்று அதிகரிப்பால், ராம்லீலாவை நடத்தும் பாரம்பரியம் உடைக்கப்படாது. ஒரே நேரத்தில் 100 க்கும் மேற்பட்டோர் ராம்லீலாவைப் பார்க்க அனுமதிக்க மாட்டார்கள்.
பாதுகாப்பாக சுகாதார நடவடிக்கையுடன் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். ஆயினும் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட சுகாதாரதுறை நடவடிக்கைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு கூறினார். அத்துடன், கொரோனா பாதிப்புகளால் ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசு ஏற்பாடு செய்யும் ஒன்பது நாள் பாரம்பரிய மாநில அளவிலான நவராத்திரி திருவிழா பெரிய அளவில் கொண்டாடப்படாது என்று குஜராத் மாநிலத்தின் முதல்வர் ரூபானி அறிவித்ததை மேற்கோளிட்டுள்ளார்.