திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. நவராத்திரி முதல் நாள் துவக்க விழாவில் பராசக்தி அம்மன் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்கள் சமூக இடைவெளி விட்டு பூஜையில் கலந்து கொண்டனர்.