Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news யோகி ராம்சுரத்குமார் வெண்கல சிலை ... கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் தேரோட்டம் கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்திற்கு வைகை நீர் திறப்பு
எழுத்தின் அளவு:
மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்திற்கு வைகை நீர் திறப்பு

பதிவு செய்த நாள்

02 டிச
2020
01:12

மதுரை : மதுரை வைகை ஆற்றில் இருந்து நேற்று அதிகாலை முதல் மாரியம்மன் தெப்பக்குளத்திற்கு நீர் திறக்கப்பட்டது. வினாடிக்கு 15 கன அடி வீதம் நீர் செல்கிறது.

இத்தெப்பக்குளத்திற்கு வைகை நீரை திருப்பி விட துார்ந்திருந்த பனையூர் கால்வாய் 2019ல் சீரமைக்கப்பட்டது. இக்கால்வாய்க்கும் வைகைக்கும் இடையே துண்டிக்கப்பட்ட இடம் மீண்டும் இணைக்கப்பட்டது. அந்தாண்டு இறுதியில் ஏ.வி., பாலம் தடுப்பணையில் இருந்து இக்கால்வாய் வழியாக தெப்பத்திற்கு வைகை நீர் திறக்கப்பட்டது. 40 ஆண்டுக்குப் பின் வைகை நீர் மூலம் தெப்பம் நிரம்பி கடலாக காட்சியளித்தது. பின் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நீர் திறக்கப்படுகிறது. சில வாரங்களாக பெய்யும் மழையில் கண்மாய்கள் நிரம்பி உபரி நீர் வைகையில் பாய்கிறது. மழை வெள்ளமும் வருவதால் ஆற்றில் நீர்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏ.வி., பாலம் தடுப்பணையில் இருந்து பனையூர் கால்வாய் மூலம் தெப்பக்குளத்திற்கு நேற்று முன்தினம் நீர் திறக்கப்பட்டுள்ளது. கால்வாய் கழிவுகளை இந்நீர் அடித்துச் சென்றது. அசுத்த நீரை தெப்பத்திற்கு விடாமல் தொடர்ந்து பனையூர் கால்வாயில் விட்டனர். நேற்று அதிகாலையில் நீர் தெளிந்த பின் தெப்பக்குளத்திற்குள் விட்டனர். தெப்பம் மேற்கிலுள்ள 3 துவாரங்கள் வழியாக நீர் பாய்கிறது. மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், வைகையில் நீர்வரத்து தொடர்ந்தால் இருவாரங்களில் தெப்பக்குளம் நிரம்பும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : அழகர் மலையிலிருந்து ஏப்., 21ல், தங்கப் பல்லக்கில் புறப்பட்டார் அழகர். ஏப்., 23ல் காலை வைகையாற்றில் ... மேலும்
 
temple news
உடுமலை; பூலாங்கிணறு முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.உடுமலை பூலாங்கிணறு ... மேலும்
 
temple news
உடுமலை; உடுமலையில் பிரசித்தி மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஓம் சகதி பராசக்தி ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: மதுரை வண்டியூர் தேனுார் மண்டபத்தில் நேற்று மண்டூக முனிவருக்கு கருட வாகனத்தில் சாப ... மேலும்
 
temple news
xதஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தமிழ் கடவுள் என போற்றப்படும் முருகனின் அறுபடை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar