Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாசிமக ... திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவிலில் மாசிமக தேர் திருவிழா திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடை அரங்கநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
எழுத்தின் அளவு:
காரமடை அரங்கநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

பதிவு செய்த நாள்

26 பிப்
2021
08:02

மேட்டுப்பாளையம்: காரமடை ரங்கநாதர் கோவில், மாசி மக தேர் திருவிழாவை முன்னிட்டு, திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

காரமடை அரங்கநாதர் கோவிலில், மாசிமக தேர்த்திருவிழா கடந்த, 20 ம் தேதி கிராம சாந்தி மற்றும் 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதைத்தொடர்ந்து, 24 ம் தேதி வரை ஒவ்வொரு வாகனங்களில், அரங்கநாத பெருமாள் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 25 ம் தேதி இரவு பெட்டதம்மன் மலையில் இருந்து, அம்மன் அரங்கநாயகி தாயாரை அழைத்து வந்து, நான்கு ரத வீதிகள் வழியாக கோவிலுக்கு அழைத்து வந்தனர். அதிகாலை, 5:30 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் துவங்கியது. தாயார் சன்னதி முன்பு அமைத்திருந்த மணமேடையில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மணக்கோலத்தில் அரங்கநாத பெருமாள் வீற்றிருந்தார். வேத வியாசர் ஸ்ரீதர் பட்டர், திருமலை நல்லான் சக்கரவர்த்தி மற்றும் கோவில் அர்ச்சகர்கள், சுரேஷ், நாராயணன், திருவேங்கடம், ராமகிருஷ்ணன், ஹரி, ராஜா ஆகிய அர்ச்சகர்கள் யாகம் வளர்த்து, திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர்.

வேத மந்திரங்கள் முழங்க, ரங்கநாத பெருமாள் சார்பாக, அர்ச்சகர்கள் ஸ்ரீதேவி, பூதேவிக்கு திருமாங்கல்யம் அணிவித்தனர். முன்னதாக திருப்பல்லாண்டு சேவித்து, மஞ்சள் இடித்து கங்கணம் கட்டுதல், பூணூல் அணிவித்தல் போன்ற வைபவங்கள் நடந்தன. அர்ச்சகர்கள் மாலைகளை கையில் ஏந்தி நடனம் ஆடி, மாலை மாற்றும் நிகழ்ச்சியும் நடந்தது. இதைத் தொடர்ந்து மாங்கல்ய பூஜையும், பிரணவம் வாசிக்கப்பட்டு, மாங்கல்ய தாரணம் நடந்தது. அம்மி மிதித்தல் நிகழ்ச்சியாக சடாரியை, அக்னி குண்டத்தை வலம் வந்து பெருமாள் முன்பு வைக்கப்பட்டது. பின்பு கோவில் ஸ்தலத்தார்கள் வாரணமாயிரம் பிரபந்தத்தை வாசித்தனர். பின்னர் சாத்துமுறை சேவித்து அலங்கார ஆரத்தி எடுக்கப்பட்டது. அதன் பின்பு மேளதாளங்கள் முழங்க, நான்கு ரத வீதிகளில் முத்துப்பல்லக்கில், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக, அரங்கநாத பெருமாள் உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு 8 மணிக்கு யானை வாகன உற்சவம் நடைபெற்றது. இவ்விழாவில் உதவி கமிஷனர் விஜயலட்சுமி, கோவில் செயல் அலுவலர் லோகநாதன், மிராசுதாரர்கள் சரவணகுமார், ஜெகநாதன், ஆனந்தராஜ், கிருஷ்ணன் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று தேரோட்டம் நடைபெறுவதை அடுத்து, அதிகாலை, 5:30 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள் தேருக்கு எழுந்தருள்கிறார். மாலை, 4:00 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாரூர் : ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் குருபெயர்ச்சி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் தஞ்சாவூர் மாவட்டம் தென்குடித்திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில், (பரிகார ஸ்தலம்),  குரு ... மேலும்
 
temple news
சோழவந்தான், சோழவந்தான் அருகே குருவித்துறை குருபகவான் கோயிலில் இன்று மாலை குரு பெயர்ச்சி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருக்கோஷ்டியூர், திருப்புத்தூர் அருகே பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயிலில்  குரு பெயர்ச்சியை ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பேரூரில், பேரூர் பட்டி நாயகர் சைவ நெறி அறக்கட்டளை சார்பில், 450 கிலோ பூக்கள் கொண்டு, மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar