Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » குதிரைக்கு நீராஜனம்
படலம் 78: குதிரைக்கு நீராஜனம் செய்யும் முறை
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2012
11:06

78வது படலத்தில் குதிரைக்கு நீராஜனம் செய்யும் முறை கூறப்படுகிறது. முதலில் குதிரைகளுக்கு நீராஜனம் என்ற சாந்திகர்மா கூறப்படுகிறது. பிறகு ஒவ்வொரு வருடமும் ஐப்பசிமாதத்தில் சுக்லபக்ஷத்தில் அஷ்டமி, நவமி அல்லது துவாதசி பவுர்ணமி ஆகிய இந்த தினங்களில் இந்த நீராஜன கர்மா செய்யவேண்டும் என்று காலம் விளக்கப்படுகிறது. நகரத்தின் வடக்கு கிழக்கு, வடகிழக்கு திசையிலோ மற்ற இடங்களிலோ இந்த பூஜை செய்யவேண்டும் என கூறப்படுகிறது. பிறகு யாகசாலை அமைக்கும் முறையும் அங்கு வேதிகை குண்டம் அமைக்கும் முறையும் கூறப்படுகிறது. பிறகு ஆசார்யன் ரக்ஷõபந்தனம் செய்துகொண்டு நல்ல கற்புள்ள பெண்களுடன் கூடி சலங்கைமருந்து இவைகளுடன் கூடி குதிரையைகார்யாரம்பம் செய்யும் முன்னதாகவே நதீதீரம் அழைத்துச்சென்று பிறகு முன்பு முறைப்படி செய்யப்பட்ட கிழக்குமுகமாக வேதிகையை அடைந்து அங்கு குண்டசம்ஸ்காரம் அக்னி ஸம்ஸ்காரம் செய்து ஏழுதினம் காலையிலும் மாலையிலும் ஹோமம் செய்யவும், பலிவிதியும் செய்யவும் என கூறி ஹோம முறை பலி கொடுக்கும் முறை கூறப்படுகிறது. இந்த ஏழுதின வேளையிலும் நதீ, சமுத்திரம், குளம், நீர்வீழ்ச்சி இவைகளிலோ குதிரைக்கு ஸ்நானம் செய்வித்து அதிகமான மருந்துகளாலும், எள்ளு, கடுகு, தயிர், பயறு இவைகளால் நன்கு தேய்த்து, தேய்த்ததால் போக்கப்பட்ட அசுத்தங்களை உடையதும், மஞ்சள்நீராட்டியதும் ஆன குதிரைகளை அவைகளின் இருப்பிடத்திலிருந்து அழைத்து, அங்கு பிரும்மசர்யத்துடன் கூடிய ஆசார்யன் ரøக்ஷக்காகவும் வீர்யத்திற்காகவும் கட்டப்பட்ட ஓக்ஷதிகளை அந்த குதிரையின் மேல் கட்டவும் என கூறப்படுகிறது. பிறகு வெளியில் நல்லமுகூர்த்தத்தில் வேதகோஷங்களால் ஸ்தோத்திரம் செய்யப்பட்ட தினத்தில் சூர்யசந்திரர்களின் கிரணங்கள் குதிரைகளின் மேல் படாதவாறு வலம்வர செய்யச் சொல்லவும். காலையிலும் மாலையிலும் இரண்டு காலத்திலும் முக்யமான குதிரைக்கு ஸ்நானம் செய்விப்பது முக்யமாகும். தினம்தோறும் ஸ்தோத்திர ஆசீர்வாத மங்களகரமான மந்திரங்கள் முடிந்தபிறகு சுக்லபக்ஷ அஷ்டமியில் காலையில் ஸ்நானம் அனுஷ்டானம் முடித்த ஆசார்யன் வெண்கடுகாலும் கோமூத்திரத்தினாலும் குதிரைகளை ஸ்னானம் செய்வித்து நவமியில் உத்திராட நக்ஷத்திரமும் திருவோண நக்ஷத்திரமும் கூடும் சமயத்தில் நகரத்திற்கு வெளியில் அவைகள் வசிக்கட்டும் என கூறி, அவைகள் வசிக்கும் இடம் முறைப்படி கூறப்படுகிறது.

அங்கு தோரணம் மாலைகளால் அலங்காரம் செய்யப்படவேண்டும். பிறகு அரசன் எல்லா மங்கள வாத்யங்களுடன் நகர ஜனங்களுடனும் கூடி உச்சமான சங்க நாதங்களுடனும் கூடி முன்பு விதிப்படி செய்யப்பட்ட சாந்தி செய்யும் யாகக்கிரஹத்தை அடைந்து வஸ்திரம் முதலியவைகளுடன் கூடிய 8 கலசத்தில் ஓஷதிகளை ஸ்தாபித்து அந்த பூஜையை முறைப்படி செய்து முன்பு அமைக்கப்பட்ட குண்டத்தில் ஹோமம் செய்யவும் எனக்கூறி அரசனால் செய்யவேண்டிய ஹோம விதிகள் நிரூபிக்கப்படுகின்றன. அரசன் புலித்தோலின் மேல் அமர்ந்து ஆசார்யனுடன் கூடி கிழக்கு முகமாக வேத விதவான்கள், குதிரை வைத்யர்களுடன் கூடி ஹோமம் செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு அரசன் பூர்ணாஹுதியின் முடிவில் அக்னியின் சுபாசுபத்தை அறிந்து வெள்ளைச்சந்தனம் வெள்ளை மாலை இவைகளுடனும் வெள்ளை வஸ்திரத்துடன் கூடின உயர்ந்ததான குதிரையின் மேல் ஏறி தோரண சமீபம் செல்லவும். அங்கு பாட்டு வாத்யங்களால் மெதுவாக அமைதியான வார்த்தைகளால் ஹோம சேஷத்தை, பால், தயிர், வாழைப்பழம் இவைகளுடன் கூட்டி பிண்டமாக அமைத்து அந்த உத்தமான குதிரைக்கு கொடுக்கவும். அந்த குதிரை சீக்ரமாக சாப்பிட்டால் அப்பொழுது ராஜா விஷயத்தை அடைவான் என கூறப்படுகிறது. பிறகு ஆசார்யன் சாந்திகம் பவுஷ்டிகம் என்ற மந்திரங்களால் சாதாரண கும்ப தீர்த்தத்தால் ராஜாவையும், குதிரையையும் பிரோக்ஷணம் செய்யவும். பிறகு சைன்யங்களையும் பிரோக்ஷணம் செய்யவும். பிறகு ஆபிசார மந்திரத்தினால், மிருன்மயமான குதிரையை கூர்மையான சூலத்தினால் மார்பு பகுதியில் குத்தவும். இவ்வாறு குதிரைக்கு ரøக்ஷ செய்து அதன் மேல் ஏறி வெற்றி அடைவதற்காக அரசன் கிழக்கு முதலான திசைகளை அடையவும் என கூறப்படுகிறது. இவ்வாறாகவே யானை முதலியவைகளுக்கும் அரசன் நீராஜனம் என்ற சாந்திகர்மாவை செய்யவும் என கூறி அங்கு செய்ய வேண்டிய விசேஷ பூஜை முறை கூறப்படுகிறது. இவ்வாறு 78வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. குதிரைகளின் சாந்தியான கெட்ட பார்வைகளை நீக்கும் முறை பற்றி கூறுகிறேன். ஒவ்வொரு வருடமும் ஆசார்யன் ஐப்பசி மாதத்தில் செய்ய வேண்டும்.

2. நவமி, அஷ்டமி, அமாவாசை, பவுர்ணமியிலோ, திவாதசியிலோ விசேஷமாக வளர்பிறையில் செய்ய வேண்டும்.

3. நகரத்தின் கிழக்கு, வடக்கு, ஈசான திக்கிலோ அல்லது வேறு இடத்திலோ செய்யவும். அதன் செய்முறை கூறப்படுகிறது.

4. அகலம் எட்டு முழ அளவும், நீளம் பத்து முழ அளவு உயரமும் நீளபாகம் இருபது முழ அளவாகவும் யாக சாலை அமைக்க வேண்டும்.

5. ஆறு முழ அளவுள்ள நான்கு வரிசையில் மூன்று முழ மத்யமாக வேதிகை அமைக்கவும். அதன் பாதி உயரமுள்ளதாக அரசனுக்கு வேதிகை அமைக்க வேண்டும்.

6. நீண்டதான வேதிகைகளின் மத்தியில் குண்டத்திற்கு இடம் அமைக்கவும். அந்த குண்டம் ஒருமுழ அளவும் மூன்று மேகலையுடன் கூடியதாக இருக்க வேண்டும்.

7. முதலில் காப்பு கட்டுதலை செய்து சலங்கை மருந்துப் பொருள்களுடன் கூடியதும், நல்ல பெண்களுடன் கூடியதுமான குதிரையை நீரின் அருகில் அழைத்து வந்து

8. வலமாக தீர்த்த கரையில் கிழக்கு முகமாக வேதிகை அமைக்கவும். அதற்கு முன்னதாக ஹோமத்திற்காக குண்டம் அமைத்து, முன்பு கூறிய முறைப்படி செய்ய வேண்டும்.

9. குண்டஸம்ஸ்காரம், அக்னி ஸம்ஸ்காரம் செய்து உயர்வான ஆசார்யன், ஹோமம் செய்யவும். நல்ல தேஜஸ்ஸையுடைய அக்னியில் கீழே கூறுபவர்களுக்கு ஹோமம் செய்யவும், இந்த ஹவிஸை பிரம்மாவிற்கும்

10. பிறகு விஷ்ணு, அக்னி, ருத்ரன். இந்திரன், வருணன், வாயு, மலையரசன், ஸ்கந்தன், குபேரன் இவர்களுக்கும்

11. நாகர்கள், நதிகள், பிரம்மா முதலானவர்கள் ஆகிய இவர்களுக்கும் முறையே இந்த ஆஹுதி, பலி இவைகளை செய்ய வேண்டும்.

12. நதீ, சமுத்திரம், குளம், தடாகம், நீர்வீழ்ச்சி இவைகளிலோ குதிரையை ஸ்நானம் செய்வித்து நிறுத்தி வைக்கவும். முன்பு கூறப்பட்ட அவுஷதிகளாலும்

13. எள், கடுகு, மாதுளை, விதை, இவைகளாலும் தயிராலும் இந்த குதிரைகளை தேய்க்கவும், அங்கு தேய்க்கப்பட்ட சுத்தமானதும் குளித்து ஆகாரங்களை பருகி, மூழ்கியதுமான குதிரைகளை

14. பிரம்மசர்யத்துடன் கூடி குதிரை லாயத்திற்கு அழைத்துச் சென்று வீர்யத்திற்காகவும், ரøக்ஷக்காகவும் இந்த குதிரைகளுக்கு முன்பு வைக்கப்பட்ட மருந்துகளை கட்டிவிட வேண்டும்.

15. காலையிலும், மாலையிலும் ஏழுதினம் முதலாக ஹோமம் செய்யவும். நெய்யை தர்பைகளால் சுத்தம் செய்து தர்பைகளால் நெய்யை ஸமர்பிக்க வேண்டும்.

16. சமித்துக்களாலும், அக்னியில் நன்கு ஜ்வாலை உள்ளதாக இரண்டாவது தினம் ஹோமம் செய்யவும், மூன்றாவது தினம் ஸ்ருக்கினால் நெய் ஹோமம் செய்து சிவந்த நிறமானதாக குதிரையை கிரஹித்துக் கொள்ள வேண்டும்.

17. தயிர், அப்பம், அன்னம் இவைகளால் ஹோமம் செய்து நான்காவது தினம் அதிகாலையில் அருணோதய வேளையில் பிரம்ம கோஷங்களால் சப்திக்கப்பட்ட சமயத்தில்

18. சூர்யன், சந்திரன், இவைகளுடைய காந்தி குதிரைகளின் மேல் படாதவாறு அவைகளை நகர்வலம் வரச் செய்யவும். காலையில் ஸ்நானம் செய்விப்பது முக்யமாகும்.

19. இரண்டு காலத்திலும் விசேஷமாக பிரதானமாக குதிரைக்கு பிரதி தினமும் ஸ்வஸ்தி வாக்யம், ஆசீர்வாதம், மங்கள வாத்யத்துடன் கூடியதாக புண்யாகவாசனம் செய்ய வேண்டும்.

20. ஏழாவது இரவு முடிந்தவுடன் ஸ்நானம் செய்து முன்புறமாய் இருந்து கொண்டு எட்டாவது நாளில் வெண்கடுகு, கோரோஜனை இவைகளால் ஸ்நானம் செய்விக்க வேண்டும்.

21. உத்திராட நக்ஷத்ரம் சேர்ந்த திருவோண நக்ஷத்திரத்தில் சுக்லபக்ஷ நவமி திதியில் நகரத்திற்கு வெளியில் வசிக்க செய்ய வேண்டும்.

22. கிழக்கிலோ, வடக்கிலோ முன்பு கூறப்பட்டுள்ள சுத்தமான ஆவரணத்துடன் பிரதட்சிண மான தீர்த்த கரையின் வடக்கில் விசாலமான மரக் கூட்டத்தில்

23. தோரணம் அமைத்து பத்து கை நீளமும், எட்டுகை அகலமும், மாலைகளால் அலங்கரிக்கப்பட்டதும், கிழக்கு நோக்கியதுமான

24. இரண்டு பக்கத்திலும் உள்ளதுமாக கொட்டகையை அமைத்து அங்கு முன்பு போல் பூஜை கார்யத்தை செய்யவும், எல்லா மங்கள வாத்யத்துடனும் பட்டணத்து ஜனங்களுடன் கூடிய அரசன்

25. விருப்பப்பட்ட வீட்டை சங்கவாத்யங்களால் சந்தோஷப்பட்டவனாக அடைந்து, சாந்தி க்ருஹத்தில் நுழைந்து இந்த பூஜை முறையை ஆசரிக்க வேண்டும்.

26. சந்தனம், கீழாநெல்லி, மஞ்சமெழுக்கு, மனச் சிலை, ஹரிதாளம், வசம்பு, தந்தம், சீந்திக்கொடி, தினை, அர்ஜீனம்

27. மஞ்சள், ஸ்வர்ண புஷ்பம், வஹ்னிமந்தம், என்ற திரவ்யம், தர்பம், கிரிகர்ணிகை, வெட்டி வேர், கடுகு, லோஹிணி என்ற திரவ்யம்

28. ஸகதேவி, நாகபுஷ்பம், விளாம்பழம், தண்ணீர்விட்டான் (சராவரீ) ஸோமவல்லி ஆகிய திரவ்யங்களை கும்பங்களில் சேர்க்க வேண்டும்.

29. எட்டு கும்பங்களிலோ வஸ்திரம், முதலியவைகளுடன் கூடியதாகவும் சந்தனம், புஷ்பம், தூபம், தீபம், நைவேத்யங்களோடு கூடியதாயும்

30. பலவித அப்பம், முதலிய திரவ்யங்களால் பலி கொடுக்கவும், குண்டத்தில் முன்போல் முன்பு கூறிய திரவ்யங்களால் முறைப்படி ஹோமம் செய்ய வேண்டும்.

31. ராஜாவானவன், புலித்தோலிலமர்ந்த வனாகவும், குரு அமைச்சர்களுடன் கூடியவனாகவும், வேத வித்வான், குதிரை வாத்யர் இருவர்களுடன் கூடியவனாகி கிழக்கு முகமாக இருந்து

32. ஹோமாக்னியின் சுப, அசுப சகுனமறிந்து, பூர்ணாஹுதி முடிந்த பிறகு சிரேஷ்டமான குதிரையின் மேல் அமர்ந்து தோரண வாயில் சமீபம் அடைந்து

33. மெதுவாக, நல்லவார்த்தைகளாலும், கானம் வாத்யமிவைகளுடன் கூடியும், வெள்ளை சந்தன, வெள்ளை மாலை தரித்தவனாகவும் வெள்ளை வேஷ்டி அணிந்தவனாகவும்

34. ஹோமத்தின் மீதியான உருண்டையை, பால் தயிருடன் கூடியதாகவும் வாழைப்பழத்துடன் கூடியதாகவும் உயர்வான குதிரைக்கு கொடுக்கவும்.

35. சீக்கிரமாக சாப்பிட்டால் அது வெற்றியை கொடுக்கவல்லதாகும். மற்ற குதிரைகளை அத்திமரக்கிளை கொம்புகளால் நனைந்த தீர்த்தங்களால்

36. பிரோக்ஷணம் செய்து ஆசார்யன், சாந்திகம், பவுஷ்டிகம் ஆகிய மந்திரங்களால் ராஜாவையும் குதிரையும் சேனையையும் பிரோக்ஷணம் செய்ய வேண்டும்.

37. பிறகு பிராம்மணன் மண்ணினால் செய்யப்பட்ட குதிரையை அதன் மார்பு பகுதியில் சூலத்தினால் குத்தவும், ஆபிசார மந்திரங்களாலும் பெரிய கருமை நிறத்தால்

38. குதிரைக்கு ரøக்ஷயை கொடுத்து கிழக்கு முகமாக அதன் மேல் ஏறி மங்கள வாத்யங்களுடன் கூடியவனாகி ராஜாவானவன் வெற்றி அடைவதற்கு செல்ல வேண்டும்.

39. இவ்வாறாகவே யானைகளுக்கும் செய்து அதை அழைத்து வந்து அதில் அரசனை ஏற்றவும், ஆனால் அந்த யானைக்கு செய்யும் நீராஜனம் கார்த்திகை மாஸத்தில் அஸ்வினீ நக்ஷத்திரத்தில் செய்ய வேண்டும்.

40. முன்பு கூறப்பட்ட எல்லா திதிகளிலும் செய்யவும், யானையின் மேல் வலம் வருதலில் விசேஷமாக சதுரஸ்ரமான கொட்டகை அமைக்க வேண்டும்.

41. வேதிகையும், சதுரஸ்ரமாக அமைத்து பிறகு யானையின் இருப்பிடம் கூறப்படுகிறது. நூறு முழ அளவு சதுரஸ்ரமாக செய்யவேண்டும்.

42. ஐம்பது அல்லது இருபத்தி ஐந்து எண்ணிக்கை உள்ள சமமான சமித்துக்களை யானைக்காக ஹோமம் செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரகாமிகாகம மஹாதந்திரத்தில் குதிரைக்கு நீராஜன விதியாகிற எழுபத்தெட்டாவது படலமாகும்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar