சோபகிருது வருடத்திற்கான பஞ்சாங்கம் வெளியீட்டு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21மார் 2023 01:03
ஸ்ரீவைகுண்டம்: சோபகிருது வருடத்திற்கான பஞ்சாங்கத்தை, ஜீயர் சுவாமிகள் வெளியிட்டார். தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில், சோபகிருது வருடத்திற்கான பஞ்சாங்கம் வெளியீட்டு விழா , ஆழ்வார்திருநகரி ஸ்ரீபராங்குசன் மண்டபத்தில் நடந்தது. விழாவிற்கு, பிராமணர் சங்க மாநிலத் தலைவர் வரதராஜன் தலைமை வகித்தார். கவுரவ தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி, கிளைத் தலைவர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்ட தலைவர் ராஜாராம் வரவேற்றார். விழாவில், ஆழ்வார்திருநகரி எம்பெருமானார் ஜீயர் சுவாமிகள் சோபகிருது வருட பஞ்சாங்கத்தை வெளியிட, டி.சி.டபிள்யூ., மூத்த செயல் துணைத் தலைவர் சீனிவாசன் பெற்றுக்கொண்டார்.