Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அழகர் வேடத்தில் மருதாநதியில் ... தங்க குதிரை வாகனத்தில் கொட்டகுடி ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் கொட்டகுடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்துாரில் ஆற்றில் இறங்கிய ஆண்டாள், ரெங்கமன்னார்
எழுத்தின் அளவு:
ஸ்ரீவில்லிபுத்துாரில் ஆற்றில் இறங்கிய ஆண்டாள், ரெங்கமன்னார்

பதிவு செய்த நாள்

12 மே
2025
01:05

ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துாரில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு ஆண்டாள், ரெங்க மன்னார் ஆற்றில் இறங்கும் வைபவம் சிறப்புடன் நடந்தது.


இதனை முன்னிட்டு இன்று காலை 9:00 மணிக்கு கோயிலில் ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் ஆண்டாள் மஞ்சள் பட்டு உடுத்தி சேஷ வாகனத்திலும், ரெங்க மன்னார் பச்சை பட்டு உடுத்தி குதிரை வாகனத்திலும் எழுந்தருளினர். பின்னர் கோயிலில் இருந்து புறப்பட்ட ஆண்டாள், ரெங்கமன்னார் மாடவீதிகள், முக்கிய வீதிகள் சுற்றி மண்டபங்கள் எழுந்தருளி ஆத்துக்கடை சந்திப்பு வந்தடைந்தனர். அப்போது வானவேடிக்கைகளுடன் செண்டை மேளம் முழங்க பக்தர்கள் எதிர்கொண்டு வரவேற்றனர். காலை 10: 20 மணிக்கு ஆண்டாளை, ரெங்க மன்னார் 3 முறை சுற்றி வரும் வையாளி சேவை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராம ராஜா தலைமையில் செயல் அலுவலர் சக்கரையம்மாள், கோயில் பட்டர்கள் செய்திருந்தனர். வி.பி.எம்.எம்.கல்வி நிறுவனங்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


* வத்திராயிருப்பு சேதுநாராயண பெருமாள் கோயிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பெருமாள் ஆற்றில் இறங்கும் வைபவம் நடந்தது. இதனை முன்னிட்டு இன்று அதிகாலை மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு திருமஞ்சன பூஜைகள் நடந்தது. பின்னர் கள்ளழகர் அலங்காரத்தில் பெருமாள் குதிரை வாகனத்தில் அர்ஜுனா நதியில் இறங்கி 3 முறை வலம் வந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், பங்குனி உத்திரம் உத்சவத்தை முன்னிட்டு, நிலமங்கை ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழாவை ஒட்டி, இன்று அதிகாரநந்தி சேவை நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் நூற்றுக்கணக்கான ... மேலும்
 
temple news
சென்னை; வடபழநி ஆண்டவர் திருக்கோயில் பங்குனி உத்திரம் இலட்சார்ச்சனை தெப்பத் திருவிழா வரும் 29ம் தேதி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் : கணபதி அக்ரஹாரத்தில் கோலாகலமாக நடந்த பிரம்ம நாகரேச்வரர் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar